மனைவி
மனைவிகளை விட்டுவிடுங்கள்
தனிமையாய் இருப்பதே
புருசகர்களுக்கு நலம்
என பறை சாற்றுபவர்களும்
கணவன்மார்களை
துரத்திவிட்டு
தனித்து வாழ்வதே
நலமான வாழ்வு
என வாழ்பவர்களும் உண்டு
நம்மில் பலர்க்கு புரிந்தது
பல ஆன்மிகவாதிகளும்
சில நாஸ்தீகவாதிகளும்
இறுதியில் தத்தம் கொள்கையை
மாற்றிய சம்பவங்கள்
யாம் அறிந்த உண்மைகள்
எமக்கு நன்கு அறிந்த
பகுத்தறிவு பெரியார் கூட
முதிர் வயதில்
திருமணமாகி இன்புற்றார்
இருமனம் கலப்பதே
திருமணம்
தத்தம் கொள்கைகளை
எடுத்து சொல்வது
அவரவர் அறிவும்
கடமையும் கூடவே
புருசர்களே
மனைவியை
அரவணையுங்கள்
அன்பு செலுத்துங்கள்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen