எங்கே ஓடிடுவாய் !
வான் உயரம் நீ பறந்தாலும்
தாழ்த்தப்படுவாய்
பூமிக்குள் மறைந்தாலும்
கண்டுபிடிக்கப்படுவாய்
எங்கே நீ .....
ஓடுவாய்
ஓடி
ஒழிப்பாய் ...
எங்கே நீ சென்றாலும்
அங்கும் நான் வருவேன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
ஏமாற்றுபவன்
மனிதர்களை
ஏமாற்றுபவன்
எத்தனை நாளைக்கு
ஏமாற்றுவான் ?
எத்தனை நாளைக்கு
ஏமாற்றுவான் ?
பதவிக்கும் பொறிக்கி போடும்
எலும்புக்கும்
அரிசிக்கும் பருப்புக்கும்
சீனிக்கும் பின்னால் போனவன்
சுத்தமாக இருக்க வேண்டிய
இடத்தை
அக்கம் பக்கம் எல்லாம்
அசிங்கமாக்கியவன்
அவன்
உதட்டில் ஒன்று
உள்ளத்தில் ஒன்று
பக்கத்து சவக்காலைக்குள்
புதைந்து கிடக்கும்
மரித்து போன உடல்களுக்கு
ஒப்பானவன்
அவன்
உதட்டில் ஒன்று
உள்ளத்தில் ஒன்று
பக்கத்து சவக்காலைக்குள்
புதைந்து கிடக்கும்
மரித்து போன உடல்களுக்கு
ஒப்பானவன்
இவனால் ஏமாற்றப்பட்டவர்கள்
ஏராளம்
இவனுக்கு காலம்
பதில் சொல்லும்
உங்கள்
கவிஞர்
ஏராளம்
இவனுக்கு காலம்
பதில் சொல்லும்
உங்கள்
கவிஞர்
கல்மகன் டேவிட்
நீ ............
ஆக்கிரமித்து
மற்றவன் காணியில்
அடக்கு முறையில்
கட்டிடம் கட்டலாம்
ஆக்கிரமித்த காணியில்
கட்டிடம் கட்ட .. உனக்கு
பணம் தந்தவனும்
துணை போனவனும்
.. பயங்கரவாதி
ஆக்கிரமித்து கட்டிடம்
கட்டும்
நீயும் பயக்கரவாதி
மொத்தத்தில் ஜேசுவின்
பெயரில் பயங்கரவாதம்
அடக்கு முறை அராஜகம்
போதகன் என்ற பெயரில்
வெளிநாட்டு பணத்துக்காக
உன்னோடு சேர்ந்து
நிப்பவனும் கழிவுகள் தான்
அடக்கு முறைகளை செய்பவன்
ஒருநாளும் அமைதியாக
உறங்குபதில்லை
உறங்கப்போவதுமில்லை
மொத்தத்தில்
சீக்கிரம் பதில்
கிடைக்கும்
உங்கள்
கவிஞர்
கவிஞர்
கல்மகன் டேவிட்
காலம் kaalam
அரசர்கள்
அல்லது அரக்கர்கள் போராடினால்
இரத்த்ப்படிவு
வரும் காலம்
எக்காள
சத்தம் கேட்டால்
போருக்கு
ஆரம்ப காலம்
எளியவன்
மறுக்கப்பட்டால்
வறுமை
நோக்கும் காலம்
அத்திமரம்
துளிர் விட்டால்
வசந்த
காலம் ஆரம்பம்
காட்டு
புறாக்களும் புஷ்பங்களும்
மலர்ந்தால்
மகிழ்வின் காலம்
அக்கிரமங்களும்
அநியாங்களும்
நிறைந்தால்
அழிவுக்காலம்
மனித
வாழ்வில் எல்லாக் காலங்களும்
மாறி
மாறி வரும் போகும்
காலங்களும்
மாறலாம்
நேரங்களும்
மாறலாம்
காலத்தையும்
நேரத்தையும்
பார்க்காதே!
உன்
வாழ்வை பார்
சீராகிடும்
சிறப்பாகிடும்
அப்போ
சமுத்திரத்தையும்
கடந்து
செல்வாய்
காலத்தயும்
நேரத்தையும்
பார்த்தால் நேரமும் வீணாகி
நிம்மதியும்
போய்விடும்
வருவது
வரட்டும்
போவது போகட்டும்
போவது போகட்டும்
நீ
உன் வாழ்வை
நோக்கி ஓடு
நோக்கி ஓடு
உங்கள்
கவிஞர்
கல்மகன் டேவிட்
கவிஞர்
கல்மகன் டேவிட்
அருமையான
நண்பர்களே !
இலங்கை
நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி இது பின்வருமாறு
உங்கள்
கவிதைகள் எவரையோ பழிவாங்குவதாக உள்ளதே ?
என்னுடைய பதில் :- நிட்சயமாக இல்லை
மாறாக நான் கண்ட / கேட்ட /
பார்த்த / அனுபவித்த இன்பம் / துன்பம் / துயரம் / வேதனைகள் /
கழுத்தறுப்புக்கள் / என்னை சூழ்ந்து வாழ்ந்த
இட மக்கள் அவர்களுடைய கலை கலாட்சாரம் நிற / மத / பேதங்கள் / துவேசங்கள்
/ கொடுமைகள் / தாழ்த்தி
நடத்துபவை / இப்படி பலவிதமான அனுபங்களை
வைத்து புதிய கவிதைகளாக
எழுதுகின்றேன் ,
என்
கவிதைகட்கு எவரும் கோவப்படவோ /
விரோதமாக வரவோ தேவைஇல்லை
காரணம் நான் சுதந்திரமான சர்வதேச
பத்திரிகையாளன் எனது உரிமை
எழுதுவது ..
ஆதலால் அன்பின்
வாசகர்
நீங்களும்
படியுங்கள் மற்றவர்கட்கும்
அறிமுகப்படுத்துங்கள் தொடர்ந்து உங்கள்
உற்சாகத்துக்கு நன்றி
உங்கள் கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
http://poemofdavid.blogspot.ch/
http://poemofdavid.blogspot.ch/

