Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Mittwoch, 24. Oktober 2012

காட்சி


                                               
                                      எங்கே ஓடிடுவாய் !


                                                  வான் உயரம்  நீ பறந்தாலும்
                                                   தாழ்த்தப்படுவாய்
                                                   பூமிக்குள்  மறைந்தாலும்
                                                   கண்டுபிடிக்கப்படுவாய்
                                                   எங்கே  நீ .....
                                                   ஓடுவாய்
                                                   ஓடி
                                                   ஒழிப்பாய் ...
                                                   எங்கே  நீ சென்றாலும்
                                                   அங்கும் நான் வருவேன்

                                                     
                                             உங்கள்  கல்மகன்
                            கவிஞர் 
                             டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி




                           








ஏமாற்றுபவன்


மனிதர்களை ஏமாற்றுபவன்
எத்தனை நாளைக்கு
ஏமாற்றுவான்
 ?


பதவிக்கும்
  பொறிக்கி போடும்
எலும்புக்கும்
அரிசிக்கும் பருப்புக்கும்
சீனிக்கும்
  பின்னால்  போனவன்


சுத்தமாக இருக்க வேண்டிய
 

 இடத்தை
அக்கம் பக்கம்
   எல்லாம் 

அசிங்கமாக்கியவன்

அவன்
உதட்டில் ஒன்று
  

உள்ளத்தில் ஒன்று
பக்கத்து சவக்காலைக்குள்
புதைந்து கிடக்கும்
 
மரித்து போன
  உடல்களுக்கு
ஒப்பானவன்


இவனால் ஏமாற்றப்பட்டவர்கள்
ஏராளம்

இவனுக்கு காலம்
பதில் சொல்லும்
உங்கள் 
கவிஞர் 

கல்மகன் டேவிட் 






நீ ............ 
ஆக்கிரமித்து
மற்றவன் காணியில் 
 அடக்கு முறையில் 
 கட்டிடம்  கட்டலாம் 

 ஆக்கிரமித்த காணியில் 
கட்டிடம் கட்ட .. உனக்கு 
பணம் தந்தவனும் 
துணை போனவனும் 
.. பயங்கரவாதி 

ஆக்கிரமித்து  கட்டிடம் 
 கட்டும் 
நீயும் பயக்கரவாதி 
மொத்தத்தில்  ஜேசுவின் 
பெயரில் பயங்கரவாதம் 
அடக்கு முறை  அராஜகம் 

போதகன் என்ற பெயரில் 
வெளிநாட்டு பணத்துக்காக 
உன்னோடு சேர்ந்து 
நிப்பவனும் கழிவுகள் தான் 

அடக்கு முறைகளை செய்பவன் 
ஒருநாளும் அமைதியாக 
உறங்குபதில்லை 
உறங்கப்போவதுமில்லை 
மொத்தத்தில் 
சீக்கிரம் பதில் 
கிடைக்கும் 
உங்கள் 
கவிஞர் 
கல்மகன்  டேவிட 



காலம் kaalam

அரசர்கள் அல்லது அரக்கர்கள் போராடினால்

இரத்த்ப்படிவு வரும் காலம்

எக்காள சத்தம் கேட்டால்

போருக்கு ஆரம்ப காலம்


எளியவன் மறுக்கப்பட்டால்

வறுமை நோக்கும் காலம்

அத்திமரம் துளிர் விட்டால்

வசந்த காலம் ஆரம்பம்

காட்டு புறாக்களும் புஷ்பங்களும்
மலர்ந்தால் மகிழ்வின் காலம்
அக்கிரமங்களும் அநியாங்களும்
நிறைந்தால் அழிவுக்காலம்

மனித வாழ்வில் எல்லாக் காலங்களும்
மாறி மாறி வரும் போகும்
காலங்களும் மாறலாம்
நேரங்களும் மாறலாம்

காலத்தையும் நேரத்தையும்
பார்க்காதே!
உன் வாழ்வை பார்
சீராகிடும் சிறப்பாகிடும்

அப்போ சமுத்திரத்தையும்
கடந்து செல்வாய்
காலத்தயும் நேரத்தையும்
பார்த்தால் நேரமும் வீணாகி
நிம்மதியும் போய்விடும்

வருவது வரட்டும் 
போவது போகட்டும்
நீ உன் வாழ்வை 
நோக்கி ஓடு

உங்கள் 
கவிஞர் 
கல்மகன் டேவிட்

அருமையான நண்பர்களே !
இலங்கை நண்பர்  ஒருவர்  கேட்ட கேள்வி இது பின்வருமாறு
உங்கள் கவிதைகள்  எவரையோ பழிவாங்குவதாக  உள்ளதே ?
என்னுடைய  பதில் :- நிட்சயமாக  இல்லை  மாறாக  நான் கண்ட  / கேட்ட /  பார்த்த  / அனுபவித்த  இன்பம் / துன்பம் / துயரம் / வேதனைகள் / கழுத்தறுப்புக்கள்  / என்னை சூழ்ந்து வாழ்ந்த இட  மக்கள் அவர்களுடைய  கலை கலாட்சாரம்  நிற / மத / பேதங்கள்  / துவேசங்கள்  / கொடுமைகள்  / தாழ்த்தி நடத்துபவை  /  இப்படி பலவிதமான  அனுபங்களை  வைத்து புதிய கவிதைகளாக  எழுதுகின்றேன் ,

என் கவிதைகட்கு  எவரும் கோவப்படவோ  /  விரோதமாக  வரவோ  தேவைஇல்லை   காரணம்  நான் சுதந்திரமான  சர்வதேச  பத்திரிகையாளன்  எனது உரிமை எழுதுவது   ..

ஆதலால்  அன்பின்  வாசகர்
நீங்களும் படியுங்கள்  மற்றவர்கட்கும் அறிமுகப்படுத்துங்கள்  தொடர்ந்து  உங்கள்  உற்சாகத்துக்கு நன்றி
உங்கள் கவிஞர் 

டேவிட்  ஜெயநாதன் அப்புக்குட்டி
http://poemofdavid.blogspot.ch/

Donnerstag, 18. Oktober 2012

Love -காதல் - Aadaraya

     
l

வரும் வரை 
Love
காதல்  கவிதை
வரும் வரை
காத்திருங்கள்
வந்தவுடன்
சொல்லிடுங்கள்

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி


உணர்வுகள்

                                       








சுதந்திரம்

ஒவ்வொரு மனிதனுக்கும்
உரிமையும் சுதந்திரமும் 
உணர்வுகளும்  உணர்சிகளும் 
தாயின் கர்ப்பத்தில் தொடங்கிய 
 தொடக்கமே !

ஆனால் 
எமக்கு மட்டும் 
உரிமையும் சுதந்திரமும் 
மறுக்கப்படுகின்றன !
காலம்  பதில் தருமா ?
இந்தக்கேள்வி 
எனக்கு மட்டும் இல்லை 

இவ் 
உலகில் வாழும் 
நம்மில் அநேகருக்கு 

அன்புடன்
கவிஞர் 
கல்மகன் டேவிட் 
.........................................................................

நம்பிக்கை 


உங்களது  விடா முயற்சியும் 
தொடர் நம்பிக்கையும் 
எனக்கு 
புதிய மகிழ்வை 
தெரியப்படுத்துகின்றது 
 ஒன்றுபட்டால்  
திடம் கொண்டு பலம் கொண்டு 
வாழலாம் 
பெரிய சாதனைகளை 
சாதிக்கலாம் 
காத்திருக்கின்றேன் 
அந்தநாள் நினைவாக


 என்றும் அன்புடன்
கவிஞர் 
உங்கள் டேவிட் (கல்மகன் )

...........................................................................................................

                                        உணர்வுகள்


இவள் கண்டது புதுமையா 
அல்லது 
அவளைப்போல நானும் 
இல்லையே 
என்பதான உணர்வா?

சிவந்த அண்டவெளி 
ஆங்காங்கே 
பரந்து கிடக்கும் 
நட்சத்திர கோள்கள் 
அதன் நடுவில் 
அழகான கண் மண்டலம் 
இது என் வர்ணணை 
இவள்  எல்லாமே மறந்து 
ஆற்று  நீர் 
ஓரத்து  மரத்து மேல் 
ஏறி நின்று 
எல்லா உணர்வுகளை வெளிப்படுத்தும் 
மேலான  உணர்வுகள் 
சில வேளைகளில் 
மிருகங்கள் 
உற்ற நண்பர்கள் 
மிருகங்களுக்கும்  உணர்வுகளும் 
உண்டு என்பது 
நிட்சயமான  உண்மை 
அம்மா உடன்  வீட்டில் 
இருந்து  பழக்கப்பட்ட 
உணர்வு 
ஆரம்ப 
பாடசாலைக்கு முதல் நாள் 
போகமுன் 
அழாமல் 
எப்படித்தான்  இருக்க முடியும் 
பாசமுள்ள மகன் 
உணர்வுகள்  இப்படித்தான் 


                                                      உங்கள்  கல்மகன்
                                 கவிஞர் 

                                     டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

......................................................................................

காலமே 

நீ கேட்க வேண்டிய
 கேள்விகளை 
கேட்க  தவறி
தட்டு தடமாறி

பின் கதவால்
தூரத்தில் நின்று
இன்னொரு வரின்  மூலம்
குரல்வவளையோடு 
நின்று நீ
குறிப்பதுவும் ஏன் ?

கனவோ உன்னோடு
சேர்ந்து நான்
நடக்க முடியுமோ ?
என் காதலனை
கண்டு பிடித்து தருவாயோ?
என கனவு கானுவதுவும் ஏன் 
                                                   உங்கள்  கல்மகன்
                                          கவிஞர் 

                                     டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி
 ----------------------------------------------------------------------------------------

பரணியில் 

காலமே 
கதறுகிறதே
என் ஆத்தமா
கலங்கியே
நிக்கின்றேன்

பாதியில்
பிரிந்துவிட்டேன்
பதறுகின்றதே
என் உள்ளம்
பரிந்திடுவாயா 
பரணியில் எனக்கு 

                                                 உங்கள்  கல்மகன்
                                        கவிஞர் 


                                     டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி
---------------------------------------------------------------------------------------------

சீக்கிரமாய் 
பல ஆண்டுகள்
என் காதலனை தேடி
காத்திருந்தேன்
வீதியெல்லாம்
தேடி திரிந்தேன்

இரவு  காலத்தில்
இருளான நேரமதில்
நாளாப் பக்க 
நகர் புறமெல்லாம்
நடந்து அலைந்து 

கண்கண்ட 
காவலர்கள்
 எல்லோரிடமும்
கேட்டு கேட்டு 
அலறி திரிந்தேன்

காணவில்லை
என சொன்னவர்களின் 
நம்பகம்
நான் அறியேன்
படித்து படித்து சொன்னேன்
பகல் நேரமெல்லாம்
உழைத்து உழைத்து சொன்னேன்
பதறாமல்  சொன்னேன்

இரவு பகல் பாராது 
கதறி கதை சொன்னேன்
மீட்ட்டுக் கொள் 
உன் ஆத்மாவை
என்றும் சொன்னேன்

இப்போ நீ
சிக்கிக் கொண்டு
மாட்டிக் கொண்டாய்
சீக்கிரமாய்  மனம் திரும்பு
அல்லது போனால்
சிதறி 
சின்னாபின்னமாகி விடுவாய்

 உங்கள்  கல்மகன்
                                 கவிஞர் 

                                     டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி
http://poemofdavid.blogspot.ch/

Montag, 15. Oktober 2012

மனம் விட்டு


அன்பானவர்களே!
 மனம் விட்டு  உங்களுடன்
எனது வாழ்வில் நடந்த இனிப்புக்கள் கசப்புக்கள் வெறுப்புக்கள்
உணர்வுகள்  இன்னும் சொல்லப்போனால் கடந்து வந்த பாதைகளில்
கற்கள் , தடைகள்  , ஏற்றம் , இறக்கம்  இன்னும் எல்லாவற்றையும் சேர்த்து
தத்ரூப  புது கவிதைகளாக உங்கள் முன் படைக்கின்றேன்

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Freitag, 12. Oktober 2012

நேசியுங்கள்


Gedicht: Pflanzenliebe
















இயற்கையை நேசி
இயற்கை உன்னை நேசிக்கும் Posted by Picasa

பூக்களை   நேசியுங்கள்
உங்கள் இருதயம்
பூப்பிரிப்பாகும்

பணத்தை மட்டும்
நினைப்பவர்களுக்கு
இயற்கையை
மறக்க  நேரிடலாம்

இயற்கை  என்பது
ஆயுள்வேத
மருந்தாகும்
என்பது உண்மை

இந்த  பூக்களுக்கும்
ஒரு சரித்திரம்
உண்டு
எப்படியோ
மலரட்டும்  பூக்கள்

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி


Mittwoch, 10. Oktober 2012

அவன்



நீ யாக  நீ இருந்தால்
அவன்
அவனாக
இருப்பான்
நீ
நீயாக
இல்லாவிட்டால்
அவன் அவனாக
இருக்க மாட்டான்

உங்கள்
கவிஞர் 
கல்மகன்  டேவிட்

Samstag, 6. Oktober 2012

நட்பு

நன்பர்களா ?

நன்பர்களாக  நடித்து
நம்பிக்கை  துரோகம்
செய்த துரோகிகள் ...
நீங்களும்  நம்பர்களா ?
என ...............................
இப்படி ... அவன்
கதறும் கண்ணீர்
எத்தனை  காதுகளில்
நித்தமும்  

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்



அடுத்த பக்கம் பார்க்க > >>>>>>>>
கவிஞர் 
 கல்மகன் டேவிட்
(கல்மகன் என்பது எனது ஆக்கங்கள் /கவிதைக்கான புனைப்பெயர்)


Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts