நன்பர்களா ?
நன்பர்களாக நடித்து
நம்பிக்கை துரோகம்
செய்த துரோகிகள்
...
நீங்களும் நம்பர்களா ?
என
...............................
இப்படி ... அவன்
கதறும் கண்ணீர்
எத்தனை காதுகளில்
நித்தமும்
கவிஞர்
டேவிட்
கவிஞர்
கல்மகன் டேவிட்
(கல்மகன் என்பது எனது ஆக்கங்கள் /கவிதைக்கான புனைப்பெயர்)
எனக்கு நெருக்கமான மூன்று நண்பர்கள் இருந்தார்கள்
சிறு வயது தொடக்கம் ஒன்றாக படித்தோம் பழகினோம் ஊரல்லாம் சுற்றி ஓடி ஆடி பறவைகள் போல சந்தோசமாக கிராமத்து கடல் தேவாலயம் கோவில் குளம் உற்றார் உறவுகள் எங்கள் வீதிகள்
சொந்தக்காரர் என வாழ்ந்தோம் மறக்கமுடியாத பசுமைகள்
என்ன நடந்தது ? ஏன் என் நண்பர்கள் அழிந்தார்கள் எதற்காக ?
பதில் சொல்ல யாரால் முடியும் ? அழிவுக்கு காரணம் பல குற்றசாட்டுக்கள்
ஒவ்வொரு நாளும் என் நண்பர்களை நினைக்கின்றேன் இவர்கள் இறந்ததன் பின் எனகென்று யாரும் நிரந்தர நண்பர்கள் கிடையாது விருப்பவும் இல்லவே இல்லை
சைகிளில் சுற்றி
வீதி வீதியாக
ரோட்டு ரோட்டாக
வலம் வந்தோம்
சிரித்து
கதைத்து
உலாவி
ஓடித் திரிந்தோம்
நட்புள்ள வாழ்வும்
வாழ்கையும்
ஒன்றோடு ஒன்று
பிணைந்தே இருந்தது
மன்றங்கள் அமைத்தோம்
மனதிற்கு பிடித்ததல்லாம்
மறக்காமல் செய்தோம்
மனமகிழ் கொண்டோம்
பாதைகள் பிரிந்து
பாதி வாழ்வை
நாசமாக்கி
தமிழனாய்
பிறந்ததால் என்னமோ
கஸ்டமும் துயரமும்
தொடர்கதையானது
இடைநடுவில்
இறப்போம் பிரிவோம்
என ஒரு நாளும்
நினைத்து பார்கவே
இல்லை
எதற்க்காக இறந்தார்கள் ?
மரணங்கள் எம்மை
பிரித்தாலும்
மனதை பிரிக்க
முடயுமா ?
உங்கள் வாழ்வும்
வாழ்க்கையும்
அர்த்தம் நிறைந்தவை
நான் வாழும் வரை
என்னோடு வாழும்
உங்கள் நினைவுகளும்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen