புதிய இதயம்
அடைபட்ட இதயம்
மீண்டும்
துடித்தது
எனக்காக அல்ல
என் குடும்பம்
உறவுகள் நண்பர்கள்
பிராத்தனைக்காக !
என் இதயம்
அடைபட்டு
துவண்டு போனபோது
துணிவுடன்
போராடியவள்
என் மனைவி
என் மகனின் அன்பும்
என் மகளின் ஆறுதலும்
அசைக்கமுடியா நம்பிக்கையை
உண்டு பண்ணியதால்
துவண்டு போகவில்லை
எதற்காக
மீண்டும் எழுந்தேன்
என்பதை
தொலைவில் இருந்த நண்பர்
துணிந்து சொன்னார்
பல பனி மலைகளை
உடைத்து
பாதை காட்டி
பக்குவ படுத்தி
பதறாதே என்றீர்
உங்கள் கண்ணீர்கள்
தியாகங்களும் உதவிகளும்
என்றைக்கும் எனக்கு
இரண்டாவது
புதிய அத்திவாரம்தான்
என் இதயம் இருக்கும் வரை
இயங்க சொன்னவருக்கு நன்றி
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen