Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Sonntag, 24. Juli 2016

யாருக்கு தேவை ? Who needs ?




Who needs ?
இன்றைய காலமதில் 
பணத்துக்காக 
குணத்தை 
இழந்து விட்டவர்கள் 
அனேகர் 

பணம் எல்லோருக்கும் வேண்டும் 
ஆனால் என் குணம் 
யாருக்கு வேண்டும் என ?
என் முத்தான வரிகளை 
வித்தாக 
முதல் முதலில் பதித்தவன் 

கடல் கடந்து வந்தவர்கள் 
இதை கண்ணியமாக கவனிக்கவில்லை 
கரிசனையும் கொள்ளவில்லை 
சமாதானம் இல்லாமல் 
சமாதானம் செய்து விட்டார்கள் 

உறவு பந்தம் பாசம் 
என்பது உண்மைதான் 
உண்மை இல்லாத 
பந்தபாசம் யாருக்கு தேவை ?
 தேவையா ?



கவிஞர்  கல்மகன் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி 





Refugee - அகதி - நாடிழந்தவர்



அகதி  -  நாடிழந்தவர் 


குனிந்த வாழ்வு
குடியேறிய
பரதேசி வாழ்க்கை
சகல நாட்டிலும்
பரிதாபம் ...........

சுமை கலந்த வாழ்வு
பிறந்த நாட்டைவிட
புகுந்த நாட்டில்
வாழ்ந்த காலங்கள்
அநேகம் ............

ஆயிரம்  ஆயிரம்  வாழ்கை  கனவுகளை
சுமந்த எனக்கு
யுத்தம் என்னும் கொடூரத்தால்
சத்தம் இல்லாமல் என் கனவுகளும்
தொலைந்து விட்டது ...............


பரதேசி வாழ்வில்
பிறந்த நாட்டுக்கா
புகுந்த நாட்டுக்கா
நான் சொந்தக்காரன் ...........

கண் அயரும் நேரமதில்
கனவுகளும் மீண்டும் வந்தாலும்
காலமும் வயதுகளும்  கடந்து
வாலிபமும் மறைந்து விட்டது ..

மன  வலிகள்  அதிகரித்து
மன உளட்சல்  பெருக்கெடுத்து
அங்கும் இல்லாது  இங்கும்  இல்லாது
ஊஞ்சல் ஆடும் என் உள்ளம்
யாரறிவார் ?

சொந்த நாடு  சுகமாய் இருந்தால்
கூனி  குறுகி  குனிந்த வாழ்வு
எந்த நாட்டிலும் எனக்கு
அவசியம் இல்லை .........

நாடு நாடாய்  அலைந்து திரிந்து
நிம்மதி  என்ற பெயரில்
ஓரிடம்  நிலைத்து வந்தாலும்
வாழ்வும் ஒரு சாவே ..........


உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி


Montag, 13. Juni 2016

என் விழிகள்




என் விழிகள்
மயங்கி  விடாது
ஒரு நாளும் தூங்காது
நான் ...
துயரமான போதும்
துணிவாய் இருக்கும்

என்னை யார்  என
அறியாமல் பேசுவது
நீ தூற்றுவது
நீ  இன்னும் ....
தெய்வத்தை  அறியவில்லை
உனக்கு இன்னும்
அறிவு வளரவில்லை
என்பதுதான் உண்மை

நான் இருக்கும் வரையிலும்
என் விழிகள்
என்னோடு  கூடவே
இருக்கும்
என் விழிகள்
மயங்கி  விடாது
ஒரு நாளும் தூங்காது

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட் ஜெயந்தன் அப்புக்குட்டி 


Donnerstag, 17. März 2016

என் பாதை



பல தோல்விகளை 
கஷ்டமாக கடந்து வந்தவன்
சில வெற்றிகளை
இலேசாக
ஜெயமாக  கொண்டவன்

என் வாழ்வில்
தோல்விகளை 
வெற்றியின்
படிக்கட்டுக்களாகவும்
பள்ளிக் கூட
புத்தகங்களாகவும்
புரிந்து  கொண்டவன்

என் பாதை
சரியான பாதை தான்
அதை
உணர்ந்து கொள்ளும்
 யாவரும் 
காலம்
ஒரு நாள் வரும்

நீ
உன்  கண்களால் 
ஒரு நாள் பார்ப்பது 
நிட்சயம்
நான்  மெதுவாக  ஓடினாலும்

அதை 
சிலர் அதைக் கண்டு
வேகமாக ஓடுகின்றனர்


நடப்பது என்ன என்பதை
முன் கூட்டிய
முற்றாக சொல்லி விட்டேன்
ம்பி
பல  புயல்களை கடந்து வந்தவன்
வெற்றி
என்பது என் வாழ்வில்
நிட்சயம்

யாருக்காகவும் யாரையும்
வெறுக்காதவன்
அநீதிக்கு  துணை  போவர்களை
கண்டிப்பவன்
திருந்தாவிட்டால்

என்பாதை தனிப்பாதை
என்பதை பல தடவை 
பகிரங்கமாக 
சொல்லியும் உள்ளேன் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Mittwoch, 2. März 2016

புதினம்




puthinam



ஏமாறாதே





 ஒருத்தனை
தொடர்ந்து
நீ
ஏமாற்றும்போது
அவன்
அப்பாவிபோல் இருந்தாலும்

ஒரு நாள்
சீறிப் பாய்ந்து
சிங்கம் போல்
மாறிவிடுவான்

 ஒருவனை
ஏமாற்றும்போது
ஏமாறுவது  அவன் அல்ல
நீதான் என்பதனை
மறந்து விடாதே !

அத்துடன்
ஒருத்தனை நீ ஏமாற்றும்போது
பலர் உன்னை  ஏமாற்றுவார்கள்
இதையும் மறந்து விடாதே

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Dienstag, 1. März 2016

A. சாமியார்

கடல் கடந்து வந்த
சாமியார் 
குடும்ப பக்தர்களை 
சந்திக்க வந்தாராம் 

நீண்டகாலம்  
லங்காவுக்கு வராததால் 
பலரை கண்கலங்க வைத்த 
கடற்கரை சாமியாரோடு 
இணைந்த பாசம் வெளிப்பட்டதாம் 

கரும்பு சாமியார்  இடம் கொடுக்க 
கடை சாமியார்  புதினம் பாத்தாராம் 
அட என்னடா என  
ஆஸ்பத்திரி  சாமியார்  அதிர்ந்து போக 
கரும்பு சாமியார் இரும்பாகி  போனாராம் 

வாழ்வும் இல்லை 
சாவும் இல்லை என்றாராம் 
வளர்ந்த சாமியார் 
அட ஆண்டவன் படைப்பில் 
இப்படியும் அதிசயங்கள் 

கடல் கடந்து வந்த சாமியார் 
சட்டு சுட்டன்று 
கடுகதி  பஸ்  எடுத்து பறந்தாராம் 
வடையை காக்கா கொண்டுபோய் விட்டதாம் 
உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts