Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Dienstag, 18. September 2012

தாய் අම්මා amma

    අම්මා அம்மா AMMA   
         இக்  கவிதை  வசனங்களை  கவனியுங்கள்  உங்கள் தாய் தகப்பனை  பெரியோரை  கனம் பண்ணுங்கள்  அதுவே  சிறந்தது 
டேவிட் ஜெயநாதன் டேவிட் 
David Jayanadan Appukutti 
உங்கள்  கல்மகன்
கவிஞர் 

டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி



          உன் நினைவு 
              ඔබගේ මතකය

விதி விளையாடி 
வெளிநாட்டு  வாழ்வு 
நிரந்தரமாகி போனதால் 
நிம்மதியும் மட்டுமல்ல 
உறவுகளும் ஓரமாய் 
ஊடறுத்து நகர்ந்தன 

வயது போன அம்மா 
பராமரிக்க வேண்டிய 
எமது கடமை 
ஆனால் 
கடல்களை 
கடந்து வாழ்வதால் 
கரங்களை கட்டிவிட்டோம் 

ஆனால் 
இதயங்களை 
தொலைத்து விட வில்லை 
நாம் தூரத்தில் 
கடல் கடந்து வாழ்ந்தாலும் 
இதயத்தில்  நீ 
என்றென்றும் வாழ்கின்றாய்  
அம்மா உன் சாவிலும் 
வாழ்வு உண்டு 
பலபெயரை வாழவைத்தாய் 
ஆனால் ?
நான் வாழும் வரை 
உன் நினைவு  என்னோடு இருக்கும் 

இப்படிக்கு மகன் 
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி 

உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்று வேதத்தில், பல இடங்களில் (யாத் 20: 12, உபா 5: 16,  மத் 15: 4, மத் 19: 19, மாற்கு 7: 10, மாற்கு 10: 19, லூக் 18: 20, எபே 6: 3) கூறப்பட்டுள்ளது. 



கண்முன்னே  தோன்றுவது 
அம்மா
உன் மேல்  பாசம்  வைத்தேன்
நேசம்   வைத்தேன்
காலத்தின்  கட்டாயத்தால்
பல  நீண்ட  தூரம்  பிரிந்து  வாழ்ந்தேன்
விதி என்னும் சதி
 உலகின் ஓர்  இடத்தில்
வாழ  வைத்தது

முற்றிலும்  மாறுபட்ட  வாழ்வும்  வாழ்கையும்
முடிந்தாக  இல்லை
தொடர்கதையாக  தொடர்கின்றது
எனக்காகவும்  பிறர்க்காகவும்
வாழ வேண்டிய கட்டாய கடமை

விபரம் அறியா காலமதில்
வினைகளை  தேடி வைத்தேன்
பருவம் அறியா காலமதில்
பதறி வாழ்ந்தேன்

விடியும் என நினைத்து
விளக்கேற்றி  வைத்தேன்
விடியலை  தேடினேன்
 இரவாகிப்போனது

கருவாகி  போன கனவுகளாக
சிதைவாகி  போனேன்
தெரியாத நேரமதில்
நெருப்பாகி  நின்றேன்

காலம் கடந்தாலும்
கலங்காதே
என்று சொல்ல
என்னருகில்  என்னவள்

என்னதான் எனக்கிருந்தாலும்
பெற்றெடுத்த
தாய்ப்பாசம்
யாரை விட்டுத்தான்  செல்லும்

கவலை கஸ்டம்  கண்ணீர்
நேரமதில்
கண்முன்னே  தோன்றுவது
அம்மாவின்  முகம் தானே

இந்த  பாக்கியம்
உலகில் வாழும் எல்லா
மகனுகளுக்கும்  அல்ல
பல விதமான தாய்க்கள்
பல விதமான மகனுகள்

கவிஞர் 
உங்கள் கல்மகன்
டேவிட்


கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்’ (ரோமர் 12: 10) என்று வேதம் கூறுகிறது.



இவள் மாறாதவள் !

தாய்
இவளது
எல்லா சூழ்நிலைகளும்
மாறினாலும்
இவள் மாறாதவள் !

ஏழை பணக்காரரோ
வறுமையோ
எல்லா நிலைமைகளிலும்
தாய் என்பவள்
ஒரே நிலைமை
உடையவள் !

உணர்வு
உணர்ட்சி
ஆதரவு
அன்பு
சமுகம்
சூழல்
கருணை
உள்ளம்
தைரியம் !

இப்படி
எல்லா நிலைமைகளையும்
பக்குவமாய்
சொல்லிகொடுத்து
வளர்த்து
 வாழ  வழிகாட்டி
நிலை நிறுத்துபவள்
அம்மா !

எத்தனை உள்ளங்கள்
அம்மாவின்
நிலமைதனை
புரிந்துகொண்டவர்கள்
புரியாவிட்டால்
புரிந்துகொள்வது
எத்தனையோ
பாக்கியமும் நன்மையும்
கூட ........

கவிஞர் 
உங்கள் கல்மகன்
டேவிட்


ஏராளம் தாராளம்

மனித இனமோ தாயின்
கர்ப்பத்தில்
பிறந்தது
பிறந்து வளர்ந்தது
பரம்பரையாக தொடர்கிறது
பாசம் அன்பு கருணை இரக்கம்
யாவையும் இழந்த நிலையில்
இன்று தவிக்கின்றது
பெற்றடுத்த தாயை
சீராட்டாமல் பாராட்டாமல்
பரிதவிக்கவிடும்  காட்சிகள்
ஏராளம் தாராளம்


இக்  கவிதை  வசனங்களை  கவனியுங்கள்  உங்கள் தாய் தகப்பனை  பெரியோரை  கனம் பண்ணுங்கள்  அதுவே  சிறந்தது 
உங்கள்
கவிஞர் 
கல்மகன் டேவிட்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts