அன்பானவர்களே!
மனம் விட்டு உங்களுடன்
எனது வாழ்வில் நடந்த இனிப்புக்கள் கசப்புக்கள் வெறுப்புக்கள்
உணர்வுகள் இன்னும் சொல்லப்போனால் கடந்து வந்த பாதைகளில்
கற்கள் , தடைகள் , ஏற்றம் , இறக்கம் இன்னும் எல்லாவற்றையும் சேர்த்து
தத்ரூப புது கவிதைகளாக உங்கள் முன் படைக்கின்றேன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
என் பணி
அதனால்தான்
சுதந்திரமாய் எழுதுகின்றேன்
சுதந்திரமானவன் என்பவன்
அடுத்தவனின்
சுதந்திரத்தில் கைவைப்பவன்
அல்ல
சுதந்திரமானவனை
யாராவது அடக்க
நினைத்தால்
தானாகவே அவர்கள்
அடங்க நேரிடும்
தப்பை வைத்துக்கொண்டு
தாமாகவே
குப்பையையும் பிடித்துக்கொண்டு
தான் நினைத்ததையும்
நாடகமாய் நடத்திக்கொண்டு
வெள்ளை அடிக்கப்பட்ட
கல்லறைகளாய்
வாலாமணி போட்டுக்கொண்டு
வலம் வரும் .......
இவர்கள்
நீதிமான் என்று பறைசாற்றினாலும்
இவர்களும் அணியாயக்கரர்களே !
இப்படியானவனை
விடாமல் துரத்துபவன் நான்
எனக்கு ஒருவகையில்
இதுவும் ஒரு பணிதான்
தெரிந்தும் தெரியாமலும்
நீங்களும் தொங்கி வாழ்ந்தால்
விலகிப் போவது என்பது
நல்லதான முடிவு
காரணம் போல்லாங்கான்
என்பதனை மறந்து விடாதே !
அன்புடன்
உங்கள்
கவிஞர்
கவிஞர்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen